Author

Um paadham paninthen Lyrics PPT உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம்மையன்றி யாரைப்பாடுவேன் - இயேசையா

உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே

 

  1. பரிசுத்தமே பரவசமே

பரனேசருளே வரம் பொருளே

தேடினதால் கண்டடைந்தேன்

பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் - உம்பாதம்

 

  1. புது எண்ணெய்யால் புது பெலத்தால்

புதிய கிருபை புது கவியால்

நிரப்பி நிதம் நடத்துகின்றீர்

நூதன சாலேமில் சேர்த்திடுவீர் - உம்பாதம்

 

  1. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்

நெருங்கி உதவி எனக்களித்தீர்

திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்

தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் - உம்பாதம்

 

  1. என் முன் செல்லும் உம் சமூகம்

எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்

உமது கோலும் உம் தடியும்

உண்மையாய் என்னையும் தேற்றிடுதே - உம்பாதம்

 

  1. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்

கொடியாய் அடியேன் படர்ந்திலங்க

கிளை நறுக்கிக் களை பிடுங்கி

கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் - உம்பாதம்

 

  1. என் இதய தெய்வமே நீர்

எனது இறைவா ஆருயிரே

நேசிக்கிறேன் இயேசுவே உம்

நேசமுகம் என்று கண்டிடுவேன் - உம்பாதம்

 

  1. சீருடனே பேருடனே

சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்

சீக்கிரமாய் சேர்த்திடுவீர்

சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் - உம்பாதம்

Posted by Lyrics Manager on December 10 at 06:15 AM