நீர் என் சொந்தம்
நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்
ஆழியின் ஆழங்களில்
ஆனந்தம் நீர் எனக்கு
சூறைச்செடியின் கீழிலும்
உம் சமூகம் என்னை தேற்றுமே - நீர்
- வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்க வல்லவர் - நீர்
- நெறிந்த நாணலை முறிக்காதவர்
மங்கி எரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தெய்வம் யேசுபரன் - நீர்