Author

Kartharin satham vallamaiyullathu Lyrics PPT கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது

திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல்

தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

 

  1. பலவான்களின் புத்திரரே

பரிசுத்த அலங்காரமாய்

கனம் , வல்லமை , மகிமை

கர்த்தருக்கே செலுத்திடுங்கள்

பிதா , குமாரன் பரிசுத்தாவியின்

புதிய ஆசீர்வாதம் பெருக - கர்த்தரின்

 

  1. கேதுரு மரங்களையும்

லீபனோனின் மரங்களையும்

கர்த்தரின் வலிய சத்தம்

கோரமாக முறிக்கின்றது

சேனை அதிபன் நமது முன்னிலை

ஜெய வீரனாகச் செல்கின்றார் - கர்த்தரின்

 

  1. அக்கினி ஜுவாலைகளை

அவர் சத்தம் பிளக்கின்றது

காதேஸ் வனாந்திரத்தை

கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்

ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்

ராஜரீகமெங்கும் ஜொலிக்கும் - கர்த்தரின்

 

  1. பெண்மான்கள் ஈனும்படி

பலத்த கிரியை செய்திடும்

காட்டையும் வெளியாக்கும்

கர்த்தரின் வலிய சத்தம்

பெலன் கொடுத்து சமாதானமீந்து

பரன் எம்மை ஆசீர்வதிப்பார் - கர்த்தரின்

Posted by Lyrics Manager on September 26 at 07:26 AM