என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர் தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே
உம்மை நேசிக்கிறேன் -2
என் கண்ணீர் துடைத்திடவே நீர் செந்நீர் சிந்தீனீரே
என் பலியைப் போக்கவே நீர் பலியாய் மாறினீரே..
சிலுவை சுமந்தீரே என்னை நினைத்தீரே
உம்மை நேசிக்கிறேன்-2
என் பாவங்கள் பாராமல்
உம் முகத்தை மறைத்தீரே - என்
மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே
மறந்தேன் என்றீரே
உம்மை நேசிக்கிறேன்-2
நான் கலங்கின நேரங்களில்
என் துணையாய் நின்றீரே - உலகம்
கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே
கண்ணீர் துடைத்தீரே
உம்மை நேசிக்கிறேன்-2