எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே , நீ
எந்நாளுமே துதிப்பாய் !
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த ;
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது - எந்நாளுமே
- பாவங்கள் எத்தனையோ - நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி - எந்நாளுமே
- எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை ?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால் - எந்நாளுமே
- நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே , பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை ;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால் – எந்நாளுமே
- மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம் ;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே - எந்நாளுமே
- தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே - எந்நாளுமே