Author

Kangalai yereduppen Lyrics PPT கண்களை ஏறெடுப்பேன் என் கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் - மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்

விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
எண்ணில்லா ஒத்தாசை எந்தனுக்கே வரும்

  1. காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்
    காலைத் தள்ளாட வொட்டார்
    வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
    காலையும் மாலையும் கண்ணுறங்காதவர் - கண்
  2. பக்தர் நிழல் அவரே - என்னை ஆதரித்திடும்
    பக்தர் நிழல் அவரே
    எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
    அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே - கண்
  3. எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே
    எல்லாத் தீமைகட்கும்
    பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
    நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் - கண்

 

Posted by Lyrics Manager on September 26 at 07:15 AM